×

பெரியார் சிலைக்கு மாலை அணிவிப்பு

காரைக்குடி, டிச.25: காரைக்குடியில் பெரியார் நினைவுநாளை முன்னிட்டு அவரது சிலைக்கு பல்வேறு அரசியல் கட்சிகள் சார்பில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. திமுக சார்பில் மண்டல தலைவர் சாமி திராவிடமணி தலைமையில், மாவட்ட தலைவர் அரங்கசாமி, மாவட்ட செயலாளர் வைகறை, தலைமை கழக பேச்சாளர் பிராட்லா உள்பட பலர் மாலை அணிவித்தனர். திமுக சார்பில் முன்னாள் அமைச்சர், மாவட்ட செயலாளர் கேஆர்.பெரியகருப்பன் எம்எல்ஏ தலைமை வகித்தார்.

முன்னாள் அமைச்சர் தென்னவன் முன்னிலை வகித்தார்.  முன்னாள் நகர்மன்ற தலைவர் முத்துத்துரை, தொழிலதிபர் நாதன், நகர செயலாளர் குணசேகரன், ஒன்றிய செயலாளர் சின்னத்துரை, சட்ட பாதுகாப்பு குழு பாலசுப்பிரமணியன், தகவல் தொழில்நுட்ப அணி மாநில துணைச் செயலாளர் இலக்குவன், வர்த்தக அணி கென்னடி, அட்சயாமணி, குருசாமி, சிறுபான்மை பிரிவு மைக்கேல், இலக்கியஅணி அபி,  நகர இளைஞரணி அமைப்பாளர் மூர்த்தி உள்பட 100க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.

மதிமுக சார்பில் மாநில இளைஞரணி துணை செயலாளர் பசும்பொன் மனோகரன், நகரசெயலாளர் சிற்பி சேதுதியாகராஜன், வழக்கறிஞர் முருகானந்தம் உள்பட பலர் கலந்து கொண்டனர். விடுதலை சிறுத்தைகள் சார்பில் மாவட்ட செயலாளர் சங்கு உதயகுமார், மாநில செயலாளர் இளையகவுதமன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Tags : Evening procession ,Periyar ,
× RELATED முல்லைப் பெரியாறு அணையில் கூடுதல்...