- முதல் அமைச்சர்
- மு.கே ஸ்டாலின்
- சென்னை
- இந்தியா
- திராவிட மாதிரி ஊராட்சி
- பாக் விரிகுடா
- தஞ்சாவூர்
- புதுக்கோட்டை
சென்னை: இந்தியாவின் முதல் கடற்பசு பாதுகாப்பகத்துக்கு உலகளாவிய அங்கீகாரம் கிடைத்ததையொட்டி முதல்வர் மு.க.ஸ்டாலின் சமூக வலைதளங்களில் நேற்று வெளியிட்டுள்ள பதிவு: தஞ்சை – புதுக்கோட்டை மாவட்டங்களில் அமைந்த பாக் வளைகுடாவில், நமது திராவிட மாடல் அரசு அறிவித்த இந்தியாவின் முதல் கடற்பசு பாதுகாப்பகத்துக்கு உலகளாவிய அங்கீகாரம். இந்த முன்னோடி முயற்சியை பாராட்டும் தீர்மானம், அபுதாபி IUCN World Conservation Congress 2025-க்கு முன் ஆன்லைன் வாக்கெடுப்பில் நிறைவேற்றப்பட்டது. இந்த முயற்சியில் பங்கேற்ற தமிழ்நாடு வனத்துறை, ஓம்கார் பவுண்டேஷன் உள்ளிட்ட அனைவருக்கும் பாராட்டுகள். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
