×

20 சதவீத இட ஒதுக்கீடு கேட்டு முட்டிபோட்டு மனு அளித்த பாமகவினர்

ஜெயங்கொண்டம், டிச.24: பாட்டாளி மக்கள் கட்சி மற்றும் வன்னியர் சங்கம் சார்பில் 20 சதவீத இட ஒதுக்கீடு கேட்டு பேரூராட்சி அலுவலகத்தில் நூதன முறையில் முட்டி போட்டு மனு கொடுத்தனர். அரியலூர் மாவட்டம் வரதராஜன்பேட்டை நகர பாட்டாளி மக்கள் கட்சி சார்பில் வரதராஜன்பேட்டை பேரூராட்சி அலுவலகத்தில், 20 சதவீத இட ஒதுக்கீடு கேட்டு கட்சியின் மாநில துணை பொதுச் செயலாளர் திருமாவளவன் தலைமையில் முட்டிபோட்டு நூதன முறையில் பேரூராட்சி அலுவலகம் முன்பு கண்டன ஆர்ப்பாட்டம் செய்தனர். பின்னர் முட்டி போட்டவாறு கோரிக்கை மனுவை வரதராஜன்பேட்டை பேரூராட்சி செயல் அலுவலர் (பொ) உஷாவிடம் கொடுத்தனர். இதில் ஆண்டிமடம் ஒன்றிய செயலாளர் ராமநாதன், வரதராஜன்பேட்டை நகர செயலாளர் ஜோசப், மாநில பொதுக்குழு உறுப்பினர் ஆசைத்தம்பி மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

Tags : Pamakavinar ,
× RELATED சேலம் அருகே கோயிலில் சாமி...