×

திருவாரூர் மாவட்டத்தில் தொழிலாளர் நல நிதியை செலுத்த நிறுவனங்களுக்கு அறிவுறுத்தல்

திருவாரூர், டிச.23: திருவாரூர் மாவட்டத்தில் தொழிலாளர் நல நிதியை செலுத்த வேண்டிய நிறுவனங்கள் அதனை செலுத்துமாறு தொழிலாளர் நல உதவி ஆணையர் பாஸ்கரன் தெரிவித்துள்ளார்.இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:தமிழ்நாடு தொழிலாளர் நல நிதி சட்டம் 1972ன் படி தொழிலாளர் நலவாரியம் அமைக்கப்பட்டு தொழிலாளர்களுக்கு என பல்வேறு நலத்திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகிறது.

இதில் தொழிலாளர் நல நிதி சட்டம் பிரிவு 2 டின் படி தொழிற்சாலைகள், மோட்டார் நிறுவனங்கள், மலைத் தோட்ட நிறுவனங்கள் உட்பட 5 மற்றும் அதற்கு மேற்பட்ட தொழிலாளர்கள் பணிபுரியும் நிறுவனங்களில் ஒவ்வொரு தொழிலாளிக்கும் தொழிலாளியின் பங்காக ரூ.10-ம், வேலை அளிக்கும் நிறுவனத்தின் பங்காக ரூ.20 ம் சேர்த்து மொத்தம் ரூ.30 வீதம் தொழிலாளர் நல நிதி பங்குத் தொகையாக சம்பந்தப்பட்ட நிறுவனங்கள் செலுத்த வேண்டும்.

அதன்படி திருவாரூர் மாவட்டத்தில் 2020 ம் ஆண்டிற்கு தொழிலாளர் நல நிதியை செலுத்த வேண்டிய நிறுவனங்கள் அடுத்த மாதம் ஜனவரி 31க்குள் தொழிலாளர் நல வாரியத்திற்கு செலுத்துமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். மேலும் இந்த நிதியினை www.lwb.tn.gov.in என்ற இணையதளத்திலும் செலுத்துவதற்கு வசதிகள் உருவாக்கப்பட்டுள்ளன. மேலும் செயலாளர், தமிழ்நாடு தொழிலாளர் நல வாரியம், டிஎம்எஸ் வளாகம், தேனாம்பேட்டை சென்னை 6 என்ற முகவரிக்கு The Secretary,Tamil Nadu Labour Welfare Board, Chennai - 6என்ற பெயருக்கு வங்கி வரைவோலைவாகவும் அனுப்பி வைக்கலாம். இவ்வாறு தொழிலாளர் உதவி ஆணையர் பாஸ்கரன் தெரிவித்துள்ளார்.

Tags : companies ,district ,Thiruvarur ,
× RELATED ஏப். 19 தேர்தல் அன்று தொழிலாளர்களுக்கு...