×

பேருந்துகளில் பயணிகளுக்கு ஒரு லிட்டர் குடிநீர் பாட்டில்கள் விற்பனை செய்ய அரசு விரைவு போக்குவரத்து கழகம் டெண்டர் கோரியது!!

சென்னை : அரசு பேருந்துகளில் பயணிகளுக்கு ஒரு லிட்டர் குடிநீர் பாட்டில்கள் விற்பனை செய்ய அரசு விரைவு போக்குவரத்து கழகம் டெண்டர் கோரியுள்ளது. இது குறித்து வெளியிடப்பட்டுள்ள அறிவிப்பில், “அரசு விரைவு போக்குவரத்து கழகத்திற்கு சொந்தமான பல்வேறு பணிமனைகளில் இருந்து பேருந்துகள் இயக்கப்படுகிறது. இந்த பேருந்துகளில் ஒரு லிட்டர் குடிநீர் பாட்டில்கள் பயணிகளுக்கு விற்பனை செய்வதற்கான ஒப்பந்தத்தை அரசு விரைவு போக்குவரத்து கழகம் கோரியுள்ளது.

சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் பாட்டில் தயாரித்து விநியோகம் செய்வதற்கான இணையவழி ஒப்பந்தப்புள்ளி தகுதி வாய்ந்த நபர்களிடம் இருந்து ஆன்லைன் இ – டெண்டர் மூலம் வரவேற்கபடுகின்றன. உரிமக்காலம், விண்ணப்பிக்கும் முறை, செலுத்த வேண்டிய முன்வைப்புத்தொகையை இணையம் மூலம் அறியலாம். மேலும் ஒப்பந்தப்புள்ளி தொடர்பான விவரங்களை www.tntenders.gov.in என்ற இணைதளத்தில் அறிந்து கொள்ளலாம்.”இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags : Government Express Transport Corporation ,Chennai ,Government Express Transport Corporation… ,
× RELATED முல்லை பெரியாறு அணையில் மதகுகளை இயக்கி துணைக்குழு ஆய்வு