×

எழுத்தறிவு தின கருத்தரங்கம்

 

சிவகங்கை, செப்.23: சிவகங்கையில் அறிவொளி சங்கமம், தமிழ்நாடு அறிவியல் இயக்கம் சார்பில் உலக எழுத்தறிவு தின கருத்தரங்கம் நடைபெற்றது. அகில இந்திய அறிவியல் இயக்க முள்ளாள் பொதுச்செயலாளர் பேராசிரியர் ராஜமாணிக்கம், தமிழ்நாடு அறிவியல் இயக்க முன்னாள் தலைவர் தினகரன் கருத்தரங்கை தொடங்கி வைத்து பேசினர். தமிழ்நாடு அறிவியல் இயக்க மாநில பொதுச்செயலாளர் முகமதுபாதுஷா சிறப்புரையாற்றினார். ஒருங்கிணைப்பாளர்கள் பாலசுப்பிரமணியன், முருகானந்தம், மாவட்டத் தலைவர் கோபிநாத், மாவட்டச் செயலாளர் ஆரோக்கியசாமி, நிர்வாகிகள் மோகனசுந்தரம், பிரபு மற்றும் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

Tags : Literacy Day Seminar ,Sivaganga ,World Literacy Day Seminar ,Enlightenment Society ,Tamil ,Nadu Science Movement ,All India ,Science ,Movement ,Mullah ,General ,Rajamanickam ,President ,Tamil Nadu Science Directorate Dinakaran Seminary ,
× RELATED உலக மாற்றுத்திறனாளிகள் தின விழா