×

கிறிஸ்துமஸ் பண்டிகையையொட்டி திப்பம்பட்டி சந்தைக்கு மாடுகள் வரத்து அதிகரிப்பு

பொள்ளாச்சி, டிச. 23: பொள்ளாச்சியில் அருகே திப்பம்பட்டியில் நேற்று நடந்த மாட்டு சந்தை நாளின்போது, தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்தும் ஆந்திரா, கர்நாடக உள்ளிட்ட வெளி மாநிலங்களில் இருந்தும் மாடுகள் வரத்து வழக்கத்தைவிட அதிகமாக இருந்தது. சுமார் ஒரு மாதத்திற்கு பிறகு நேற்று சுமார் 1500க்கும் மேற்பட்ட மாடுகள் விற்பனைக்காக கொண்டு வரப்பட்டிருந்ததால் சந்தை களை கட்டியது.

 மேலும், கிறிஸ்துமஸ் பண்டிகை நெருங்குவதையொட்டி சந்தையில் மாடுகளை வாங்க, கேரள வியாபாரிகள் வருகை அதிகளவில் இருந்தது. இதனால், மாடு விற்பனை விறுவிறுப்புடன் நடைபெற்றதுடன் கூடுதல் விலைக்கு போனது இதில் ஒரு காளைமாடு ரூ.28 ஆயிரம் முதல் அதிகபட்சமாக ரூ.35 ஆயிரத்துக்கும், பசுமாடு ரூ.28 ஆயிரத்துக்கும், எருமைமாடு ரூ.33 ஆயிரத்துக்கும், கன்று குட்டிகள் ரூ.8 ஆயிரம் முதல் ரூ.15 ஆயிரத்துக்கும் விலை போனது என மாட்டு வியாபாரிகள் தெரிவித்தனர்.

Tags : Thippampatti ,
× RELATED திப்பம்பட்டி கூட்ரோடில் போக்குவரத்து சிக்னல் அமைக்க கோரிக்கை