×

லாட்டரி விற்றவர் கைது

திருப்பூர், டிச.22: திருப்பூர் அனுப்பர்பாளையம் புதூர் சந்திப்பு பகுதியில் 15 வேலம்பாலையம் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அந்த பகுதியில் சந்தேகத்திற்கு இடமாக நின்று கொண்டிருந்த நபரை போலீசார் விசாரித்தனர். அவர் சோளிபாளையம் பகுதியை சேர்ந்த மகேஷ் குமார் (40) என்பதும், அவர் தடை செய்யப்பட்ட லாட்டரி விற்பனையில் ஈடுபட்டு வந்ததும் தெரியவந்தது. இதையடுத்து அவரை கைது செய்த போலீசார் அவரிடம் இருந்து ரூபாய் 3 ஆயிரம் பறிமுதல் செய்தனர். இதுகுறித்து போலீசார் வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர்.

Tags : Lottery seller ,
× RELATED லாட்டரி விற்றவர் கைது