×

22பவுன் நகைகள் பறிமுதல் கலெக்டர் அலுவலகம் அருகே தர்ணாவில் ஈடுபட்ட 15 ஓவியர்கள் கைது

புதுக்கோட்டை, டிச.22: புதுக்கோட்டை மாவட்டத்தில் ஊராட்சிக்கு தலா 2 சுவர்கள் வீதம் 497 ஊராட்சிகளில் ஊரக வளர்ச்சித் துறை மூலம் ரூ.25 லட்சத்தில் கொரோனா விழிப்புணர்வு ஓவியம் வரையும் பணிக்கு அண்மையில் தனியாருக்கு ஒப்பந்தம் விடப்பட்டது. இதை ரத்து செய்துவிட்டு, இப்பணியை ஓவியர் சங்கத்துக்கு வழங்க வேண்டும் என தமிழ்நாடு ஓவியர் சங்கத்தின் மாவட்ட செயலாளர் ராதாகிருஷ்ணன் தலைமையில் கலெக்டர் அலுவலகத்தில் ஓவியர்கள் ஏராளமானோர் மனு அளிக்க சென்றனர். அப்போது கலெக்டர் அலுவலக முன்வாசலில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த போலீசார், அலுவலகத்துக்குள் செல்ல ஓவியர்களை அனுமதிக்கவில்லை. இதைக் கண்டித்து அந்த இடத்திலேயே தர்ணாவில் ஈடுபட்டனர். மறியலில் ஈடுபட்ட 15 பேரை போலீசார் கைது செய்தனர்.

Tags : jewelers ,painters ,tarna ,office ,collector ,
× RELATED ஈரோடு நேதாஜி சாலையில் புதுப்...