×

அஞ்செட்டி அருகே நாட்றாம்பாளையத்தில் தொழிலாளி நாய் கடித்ததில் உயிரிழப்பு

 

கிருஷ்ணகிரி: அஞ்செட்டி அருகே நாட்றாம்பாளையத்தில் தொழிலாளி மல்லப்பா(50) நாய் கடித்ததில் உயிரிழந்துள்ளார். ஆக.27ல் தெரு நாய்களை மல்லப்பா விரட்டியபோது, அவரது முகத்தில் நாய் கடித்துள்ளது. தேன்கனிக்கோட்டை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு 5 நாட்கள் சிகிச்சை பெற்றார் மல்லப்பா. நேற்று முன்தினம் மல்லப்பாவுக்கு தலைசுற்றல், வாந்தி ஏற்பட்டதால் மீண்டும் தேன்கனிக்கோட்டை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். மல்லப்பா உடல்நிலை மோசமானதால் மேல்சிகிச்சைக்காக கிருஷ்ணகிரி அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். கிருஷ்ணகிரி அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட மல்லப்பா சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.

 

Tags : Natrampalayam ,Ancheti Krishnagiri ,Mallappa ,Natrampalaya ,Ancheti ,Thenkanikotte Government Hospital ,
× RELATED விஜய் தற்போது முன்னாள் நடிகர் நாங்கள்...