×

இறால் பண்ணைகளை அகற்றக்கோரி பொதுமக்கள் திடீர் ஆர்ப்பாட்டம்: கல்பாக்கம் அருகே பரபரப்பு

திருக்கழுக்குன்றம்: கல்பாக்கம் அருகே பெருகி வரும் இறால் பண்ணைகளை அகற்றக்கோரி பொதுமக்கள் திடீர் என ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டதால், அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. கல்பாக்கம் அடுத்த கூவத்தூர் அருகேயுள்ள கானத்தூர் கிராமத்தில் வெளி மாநிலத்தவர்கள் அதிகளவு இறால் பண்ணைகள் அமைத்து வருகின்றனர். இந்த பண்ணைகளில் இறால்களுக்கு ரசாயனம் கலந்த தீனி போடுவதால் நிலத்தடி நீர் மாசடைந்து வருகின்றது. இதனால், அங்குள்ள விவசாய நிலங்கள் பாதிக்கப்படுவதால், இறால் பண்ணைகளை அகற்றக்கோரி வருவாய் துறை உள்ளிட்ட அதிகாரிகளுக்கு பொதுமக்கள் தொடர்ந்து கோரிக்கை விடுத்து வந்தனர். ஆனாலும், பண்ணைகளை அதிகாரிகள் அகற்றாததால் அதனை கண்டித்து ஆத்திரமடைந்த பொதுமக்கள் 50க்கும் மேற்பட்டோர் நேற்று இறால் பண்ணைகளை முற்றுகையிட்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதனால், அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

Tags : protest ,removal ,shrimp farms ,Kalpakkam ,
× RELATED வாக்காளர் பட்டியலில் இருந்து பெயர்...