கிருஷ்ணகிரி, டிச.21: கிருஷ்ணகிரி பகுதியில் முடித்திருத்தகம், அழகு நிலையம் மற்றும் மசாஜ் சென்டர் நடத்துவோர் உரிமம் பெறுவது கட்டாயம் என நகராட்சி ஆணையாளர் சந்திரா தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிடடுள்ள செய்திக்குறிப்பு: கிருஷ்ணகிரி நகராட்சிக்குட்பட்ட இடங்களில் முடித்திருத்தகம், அழகு நிலையம் மற்றும் மசாஜ் சென்டர் நடத்துவோர், நகராட்சியில் குறிப்பிடப்பட்டுள்ள விண்ணப்பத்தை, நகராட்சி ஆணையாளரிடமிருந்து பெற்று, இந்த அறிவிப்பு வெளியிட்ட நாளில் இருந்து 30 நாட்களுக்குள் சமர்ப்பித்து உரிமம் பெற வேண்டும்.
தவறும் பட்சத்தில், தொழில் உரிமம் இன்றி செயல்படுவதாகக் கருதி, நிலையம் நடத்துவோரும், நிலைய உரிமையாளரும் பொறுப்பானவராக கருதி நிலையத்தை மூடி, சீல் வைத்தல் உள்ளிட்ட அனைத்து சட்டப்பூர்வ நடவடிக்கையும் மேற்கொள்ளப்படும். இவ்வாறு செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ள.