×

சாத்தூரில் கூட்டுறவுத்துறை அமைச்சரை கண்டித்து ஆர்ப்பாட்டம்

சாத்தூர், டிச.21:  ஒரு குறிப்பிட்ட சமுதாயத்தை கூட்டுறவுத்துறை அமைச்சர் செல்லூர் ராஜூ இழிவாக பேசியதாக கூறி அவரை கண்டித்து சாத்தூரில் யாதன சமுதாயத்தினர் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். தமிழக கூட்டுறவு துறை அமைச்சர் செல்லூர் ராஜூ, மதுரையில் செய்தியாளர் சந்திப்பின்போது ஒரு குறிப்பிட்ட சமுதாயத்தை இழிவாக பேசியதாக கூறியதாக புகார் எழுந்தது. இதற்கு எதிராக போராட்டம் தமிழகம் முழுவதும் வெடித்துள்ளது. சாத்தூர் முக்குராந்தலில் யாதவ சமுதாய தலைவர் வேல்சாமி தலைமையில், செயலாளர் முருகன் முன்னிலையில் நேற்று கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. நூற்றுக்கும் மேற்பட்டோர் ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டு கண்டன முழக்கங்களை எழுப்பினர்.

Tags : Demonstration ,Minister of Cooperatives ,Sattur ,
× RELATED அரசு பஸ் கண்ணாடியை உடைத்த வாலிபர் கைது