×

காஸ் விலை உயர்வை கண்டித்து மாதர்கள் ராஜபாளையத்தில் நூதன போராட்டம்

ராஜபாளையம், டிச. 21:  காஸ் விலை உயர்வை கண்டித்து  ராஜபாளையம் ஜவஹர் மைதானத்தில் அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கம் சார்பில் காஸ் சிலிண்டருக்கு இறுதி மரியாதை செய்து ஒப்பாரி வைத்து நூதனப் போராட்டம் நடைபெற்றது. மாதர் சங்கம் நகர செயலாளர் மேரி தலைமையில் நடைபெற்ற இப்போராட்டத்தின் போது காஸ் சிலிண்டர் விலை உயர்வை கண்டித்து சிலிண்டருக்கு பாடைகட்டி ஒப்பாரி வைத்து, இறுதி அஞ்சலி செலுத்தியும் மாதர்கள் நூதன முறையில் போராட்டம் நடத்தினர். இந்த போராட்டத்தை விளக்கி மாநில பொதுச்செயலாளர் சுகந்தி விளக்க உரையாற்றினார் கடந்த 1 மாதத்தில் மத்தியில் ஆளும் பாஜ அரசு காஸ் சிலிண்டருக்கு 100 ரூபாய் உயர்த்தியதை  கண்டித்து கண்டன கோஷங்கள் முழக்கமிட்டனர்.

Tags : protest ,Matara Rajapalayam ,
× RELATED மீஞ்சூர் அருகே சாலையை சீரமைக்க கோரி மக்கள் மறியல் போராட்டம்..!!