×

செம்பனார்கோயிலில் பெட்ரோல் பங்க் ஊழியர் மீது தாக்குதல்

மயிலாடுதுறை, டிச.18: மயிலாடுதுறை அருகே உள்ள செம்பனார்கோயில் பகுதியில் உள்ள பெட்ரோல் பங்கில் காலஹஸ்தினா புரத்தை சேர்ந்த ராமதாஸ்(68) என்பவர் வேலை பார்த்து வருகிறார். சம்பவத்தன்று இரவு 9 மணி அளவில் ஆறுபாதி கிராமத்தை சேர்ந்த செல்வகுமார் என்பவர் தனது வாகனத்திற்கு பெட்ரோல் போட்டுள்ளார். ஊழியர் ராமதாஸ் பெட்ரோலுக்கான பணத்தை கேட்டபோது, என்னிடமே பணம் கேட்கிறாயா என்று கையில் வைத்திருந்த ஸ்பானரால் ராமதாசின் தலையில் அடித்து கொலை மிரட்டல் விடுத்து சென்றுவிட்டார். இதில் காயமடைந்த ராமதாஸ் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். அவர் அளித்த புகாரின் பேரில் செம்பனார்கோவில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags : petrol punk employee ,Sembanarkoil ,
× RELATED செம்பனார்கோயில் அருகே ஆறுபாதியில்...