×

பரப்பாடி அருகே வீட்டை உடைத்து பொருட்கள் திருட்டு

நாங்குநேரி, டிச. 18: நெல்லை மாவட்டம், நாங்குநேரி அடுத்த பரப்பாடி கீழக்கழுவூரைச் சேர்ந்தவர் அந்தோனி ஜேசு அலெக்ஸ் (45). சென்னையில் குடும்பத்துடன் வசித்து வரும் இவர், தற்போது அங்குள்ள அஸ்தினாபுரத்தில் பிளாஸ்டிக் கம்பெனி மற்றும் ஜவுளி கடை நடத்தி வருகிறார். இந்நிலையில் கழுவூரில் பூட்டிக்கிடந்த நிலையில் இருந்த இவரது வீட்டில் கடந்த சில நாட்களுக்கு முன்னர் மர்ம நபர்கள் பின்வாசல் கதவை உடைத்து உள்ளே புகுந்தனர். மேலும் அங்கிருந்த பித்தளை அண்டா குடம் உள்ளிட்ட பாத்திரங்கள் மற்றும் பொருட்களைத் திருடிச்சென்றனர். இவற்றின் மதிப்பு சுமார் ரூ.20 ஆயிரம் ஆகும். புகாரின்ேபரில் வழக்குப் பதிந்த விஜயநாராயணம் எஸ்ஐ ஷாஜி, மர்ம நபர்களைத் தேடி வருகிறார்.

Tags : theft ,Barabadi ,
× RELATED சென்னை திருவொற்றியூரில் விசாரணைக்கு...