×

பாலியல் தொழிலாளிகளிடம் செல்பவர்களை வாடிக்கையாளர்கள் என்று கருத முடியாது: கேரள உயர்நீதிமன்றம்

திருவனந்தபுரம்: பாலியல் தொழிலாளிகளிடம் செல்பவர்களை வாடிக்கையாளர்கள் என்று கருத முடியாது என கேரள உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது. மேலும் ‘வாடிக்கையாளர் என்பவர் பொருள் அல்லது சேவையை பெறுபவர்; பாலியல் தொழிலாளியை ஒரு பொருள் என கொச்சைப்படுத்த முடியாது. பாலியல் தொழிலை தூண்டுபவரை வாடிக்கையாளராக கருதினால் பாலியல் தடுப்புச் சட்டத்தின் நோக்கம் சிதைந்துவிடும்’ எனவும் கேரள உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது. போலீஸ் சோதனையில் சிக்கியவர் தான் வாடிக்கையாளர் என்றும் தன் மீது சட்ட நடவடிக்கை எடுக்க முடியாது என்றும் முறையிட்டார். வழக்கை விசாரித்த நீதிபதி வி.ஜி.அருண் பாலியல் சேவை பெறுபவர் பாலியல் தொழிலை தூண்டுவதாக தீர்ப்பளித்தார். பாலியல் தொழிலை தூண்டுபவரை வாடிக்கையாளராக கருதினால் பாலியல் தடுப்புச் சட்டத்தின் நோக்கம் சிதைந்துவிடும் என நீதிபதி தெரிவித்துள்ளார். பாலியல் தொழிலாளியிடம் சென்றவர் மீது வழக்குப் பதிவு செய்ததை உறுதி செய்து கேரள உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

Tags : Kerala High Court ,Thiruvananthapuram ,
× RELATED கடும் எதிர்ப்பை மீறி அமலுக்கு வந்தது...