திருவள்ளூர்: திருவள்ளூர் மாவட்டம். கும்முடிப்பூண்டி வட்டம் தண்டலச்சேரி கிராமத்தில் இரவு நேரங்களில் லாரிகளில் ஏரி மண் திருடி செல்கின்றனர். இதுகுறித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். இரவு நேரங்களில் மண் எடுக்கக் கூடாது என்று அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ள நிலையில் இரவு நேரங்களில் மணல்களை எடுத்து செல்கிறார்கள் .
