×

தமிழகத்தில் 17 மாவட்டங்களில் இரவு 7 மணி வரை மழைக்கு வாய்ப்பு: வானிலை மையம்!

 

சென்னை: தமிழகத்தில் 17 மாவட்டங்களில் இன்று இரவு 7 மணி வரை மழைக்கு வாய்ப்பு என சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது. மேற்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக, இன்று தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி, மின்னலுடன் கூடிய, லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்தது.

இந்நிலையில், தமிழகத்தில் 17 மாவட்டங்களில் இன்று இரவு 7 மணி வரை மழை பெய்ய வாய்ப்புள்ளது என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதன்படி மதுரை, புதுக்கோட்டை, சிவகங்கை, தஞ்சாவூர், திருச்சிராப்பள்ளி, தருமபுரி, கள்ளக்குறிச்சி, திருவண்ணாமலை, விழுப்புரம், கோவை, நீலகிரி, திருப்பூர், தென்காசி, தேனி, திண்டுக்கல், கரூர் மற்றும் விருதுநகர் ஆகிய மாவட்டங்களில் லேசான மழை பெய்ய வாய்ப்புள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

Tags : Tamil Nadu ,Meteorological Department ,Chennai ,Chennai Meteorological Department ,Puducherry ,Karaikal… ,
× RELATED நாட்டின் பன்முகத்தன்மையை சிதைக்க...