×

ரூ.1.5 லட்சம் கையாடல் செய்ததாக குற்றச்சாட்டு தனியார் நிதி நிறுவன கழிவறையில் கணக்காளர் தீக்குளித்து தற்கொலை

சென்னை: தண்டையார்பேட்டை ரெட்டை குழி தெருவை சேர்ந்தவர் கணேஷ் (33). கடந்த 3 ஆண்டுகளாக அண்ணாசாலை ஜி.பி. சாலையில் உள்ள கே.ஜி.பிளாசாவில் இயங்கி வரும் தனியார் நிதி நிறுவனத்தில் கணக்காளராக பணிபுரிந்து வந்த இவர், கடந்த மாதம் வேலையில் இருந்து நின்றார். இவர் ரூ.1.5 லட்சம் மோசடி செய்ததாக நிதி நிறுவனம் சார்பில் குற்றம்சாட்டப்பட்டது. இதுகுறித்த விசாரணைக்கு கணேஷ் நேற்று முன்தினம் மாலை நிதி நிறுவனத்திற்கு வந்துள்ளார். அங்கு  அலுவலக கழிவறைக்கு சென்ற கணேஷ், கேனில் வாங்கி வந்த பெட்ரோலை உடலில் ஊற்றி தீக்குளித்தார். உடல் முழுவதும் தீ பரவியதால் அலறினார். சத்தம் கேட்டு ஓடிவந்த ஊழியர்கள், அவரை மீட்டு கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால் அவர் இறந்து விட்டதாக டாக்டர்கள் தெரிவித்தனர். இதுகுறித்து அண்ணா சாலை போலீசார் வழக்கு பதிவு செய்து நிதி நிறுவன அதிகாரிகளிடம் விசாரித்து வருகின்றனர்.

Tags : Accountant ,suicide ,institution ,
× RELATED தர்மபுரி அருகே இன்ஸ்டாகிராம்...