×

தென்கொரியா மாஜி அதிபர் மனைவி மீது ஊழல் குற்றச்சாட்டு பதிவு

சீயோல்: தென்கொரிய அதிபராக இருந்த யூன் சுக் இயோல் கடந்தாண்டு இறுதியில் நாட்டின் அவசர நிலையை பிரகடனப்படுத்தினார். இதனால் அவர் மீது நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வரப்பட்டு பதவிநீக்கம் செய்யப்பட்டார். தொடர்ந்து அவர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். இந்நிலையில் யூன் சுக் இயோலின் மனைவி கிம் கியோன் ஹீ, தனது கணவரின் அதிகாரத்தை பயன்படுத்தி பரிசு பொருட்கள் மற்றும் லஞ்சம் பெற்றதாக புகார் எழுந்தது. இதுதொடர்பான வழக்கில் அவரும் கைது செய்யப்பட்டார்.

இந்நிலையில், கிம் கியோன் ஹீ மீது குற்றச்சாட்டு பதிவு செய்யப்பட்டு நீதிமன்றத்தில் விசாரணை நடைபெற உள்ளது. இதன் இறுதியில் அவருக்கான தண்டனை விவரம் அறிவிக்கப்பட உள்ளது.

Tags : South Korea ,Majhi Chancellor ,Seoul ,Yun Chuk Yeol ,Yun ,
× RELATED தோஷாகானா ஊழல் தொடர்பான 2வது வழக்கில்...