×

சேர்ந்து வாழ மனைவி மறுப்பு தந்தை, மகன் தீக்குளித்து தற்கொலை

சென்னை: ஆதம்பாக்கம், பாலாஜி நகர், 6வது தெருவில் வசித்தவர்  பாரி (45). சிவில் இன்ஜினியர். இவரது மனைவி பாலம்மாள் (43), மகன் பாலமுருகன் (10), அங்குள்ள தனியார் பள்ளியில் 6ம் வகுப்பு படித்து வந்தான். கடந்த 7 ஆண்டுகளுக்கு முன் கணவனுடன் ஏற்பட்ட கருத்துவேறுபாடு காரணமாக, பாலம்மாள் பிரிந்து ஆதம்பாக்கம் வேல் நகரில் தனியாக  வசித்து வருகிறார்.

இந்நிலையில், நேற்று  மாலை 4 மணி அளவில் பாரி வீட்டிலிருந்து அலறல் சத்தம் கேட்டது. உடனே அக்கம் பக்கத்தினர் ஓடிச்சென்று பார்த்தபோது, அலறல் சத்தத்துடன் வீட்டிலிருந்து கரும்புகையுடன் தீ ஜூவாலை வெளியே வந்தது. இதுபற்றி ஆதம்பாக்கம் காவல் நிலையத்திற்கு தகவல் கொடுத்தனர். அதன்பேரில், போலீசார் மற்றும் தீயணைப்பு வீரர்கள் விரைந்து வந்து தீயை அணைத்தனர். பின்னர் வீட்டின் உள்ளே சென்று பார்த்தபோது பாரி, அவரது மகன் பாலமுருகன் ஆகியோர் கட்டியணைத்தபடி தீயில் கருகி  இறந்து  கிடந்தனர்.

போலீசார், சடலங்களை  கைப்பற்றி குரோம்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். விசாரணையில், மனைவி பிரிந்த ஏக்கத்தில் கணவனும், தாயை பிரிந்த ஏக்கத்தில் மகனும் இருந்ததால் இருவரும் மனமுடைந்து தற்கொலை செய்து கொள்ள முடிவெடுத்துள்ளனர். அதன்படி, பாரி தன் மீதும், மகன் மீதும் மண்ணெண்ணையை ஊற்றி தீக்குளித்தது தெரியவந்தது.  மேலும், பாரி தனது வீட்டின் உரிமையாளரிடம் ஒரு கவர் கொடுத்திருந்தார். அதில் 3 ஆயிரமும் இதனை ஈமச்சடங்கிற்கு  வைத்துக்கொள்ளும்படிம் எழுதி இருந்தார். இதுகுறித்து போலீசார் தொடர்ந்து விசாரிக்கின்றனர்.

Tags : suicide ,
× RELATED தர்மபுரி அருகே இன்ஸ்டாகிராம்...