×

ரஷ்யாவில் பெட்ரோல் தட்டுப்பாடு: வாகன ஓட்டிகள் கடும் அவதி

மாஸ்கோ: உக்ரைன்-ரஷ்யா போர் 3 ஆண்டுகளுக்கும் மேலாக நீடித்து வருகிறது. இந்த போரை முடிவுக்கு கொண்டு வர அமெரிக்க அதிபர் டிரம்ப் உள்பட உலக நாடுகளின் தலைவர்கள் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறார்கள். இருப்பினும் போர் தீவிரம் குறையாமல் தொடர்ந்து வருகிறது. இந்நிலையில் ரஷ்யா மீது உக்ரைன் ராணுவத்தினர் அதிநவீன ஆளில்லா விமானங்களை ஏவி தொடர் தாக்குதல் நடத்தி வருகின்றனர். குறிப்பாக ரஷ்யாவின் எண்ணெய் கிணறுகள், சுத்திகரிப்பு ஆலைகள் மற்றும் பெட்ரோல் பங்குகளை குறிவைத்து தாக்குதல் நடத்தப்படுகிறது.

இதனால் ரஷ்யாவில் செயின்ட் பீட்டர்ஸ்பெர்க் உள்ளிட்ட இடங்களில் பெட்ரோல்-டீசல் தட்டுப்பாடு நிலவுகிறது. வாகனங்கள் எரிபொருள் நிரம்ப நீண்ட வரிசைகளில் நிற்பதை காணமுடிகிறது. மேலும் நபர் ஒருவருக்கு குறிப்பிட்ட அளவிலேயே எரிபொருள் வழங்கப்படுகிறது. இதனால் ரஷ்ய மக்கள் கடும் அவதியடைந்து வருகின்றனர்.

Tags : Russia ,Moscow ,Ukraine ,US ,President Trump ,
× RELATED வங்கதேசத்தின் சிட்டகாங்கில் இந்திய...