×

கிரைண்டரில் மாவு அரைத்தபோது மின்சாரம் பாய்ந்து பெண் பலி

பொங்கலூர், டிச. 11:  கிரைண்டரில் மாவு அரைத்த போது மின்சாரம் பாய்ந்து பெண் பலியானார். பல்லடத்தையடுத்த காமநாயக்கன்பாளையம் வதம்பச்சேரியை சேர்ந்தவர் விவசாயி பொன்னுச்சாமி. இவர் தனது மனைவி ஈஸ்வரி (56) மற்றும் 2 மகள்களுடன் வசித்து வந்தார். இந்த நிலையில் ஈஸ்வரி வீட்டில் நேற்று  கிரைண்டரில் மாவை அரைத்துள்ளார். அப்போது எதிர்பாராதவிதமாக மின்சாரம் பாய்ந்ததில் ஈஸ்வரி சம்பவ இடத்திலேயே மயங்கி சுருண்டு விழுந்தார்.
இதையடுத்து அவரை உறவினர்கள் மீட்டு பல்லடம் அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். ஈஸ்வரியை பரிசோதித்த மருத்துவர்கள் வரும் வழியிலேயே அவர் இறந்துவிட்டதாக தெரிவித்தனர். நெகமம் போலீசார் வழக்குப்பதிந்து விசாரிக்கின்றனர்.

Tags :
× RELATED திருமூர்த்தி அணை நீர்மட்டம் குறைந்தது