பரமக்குடி, டிச.11: பரமக்குடி பார்த்திபனூரில் அதிமுக மகளிர் அணி சார்பாக ராமநாதபுரம், சிவகங்கை, விருதுநகர், மதுரை, தேனி, திண்டுக்கல் ஆகிய மாவட்டங்களில் பூத் வாரியாக மகளிர் குழு அமைப்பது குறித்த ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. மகளிர் அணி இணைச் செயலாளர் கீர்த்திகா முனியசாமி ஏற்பாட்டில் நடைபெற்ற கூட்டத்திற்கு அதிமுக மாவட்ட செயலாளர் முனியசாமி தலைமை வகித்தார். சிறுபான்மை பிரிவு செயலாளர் அன்வர்ராஜா, பரமக்குடி எம்எல்ஏ சதன் பிரபாகர் முன்னிலை வகித்தனர். மாநில மகளிர் அணி செயலாளர் விஜிலா சத்தியானந்த் சிறப்புரையாற்றினார்.
நிகழ்ச்சியில் மாவட்ட மகளிரணி செயலாளர் ஜெய்லானி சீனிக்கட்டி, முன்னாள் மாவட்ட செயலாளர் தர்மர், அம்மா பேரவை மாவட்ட செயலாளர் சேதுபாலசிங்கம், மாணவர் அணி மாவட்ட செயலாளர் செந்தில்குமார், தகவல் தொழில்நுட்ப பிரிவு மாவட்ட செயலாளர் சரவணக்குமார், வர்த்தக அணி மாவட்ட செயலாளர் உதுமான் அலி, ஒன்றிய செயலாளர்கள் நாகநாதன், குப்புசாமி, முத்தையா, பரமக்குடி அம்மா பேரவை செயலாளர் வடமலையான், பார்த்திபனூர் நகரச் செயலாளர் வினோத், நயினார் கோவில் ஒன்றிய தலைவர் வினிதா குப்புசாமி கலந்துகொண்டனர்.