சென்னை: கண்ணகி நகரில் மின்சாரம் தாக்கி உயிரிழந்த தூய்மை பணியாளர் வரலட்சுமியின் குடும்பத்திற்கு ரூ.20 லட்சம் இழப்பீடு வழங்க தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது. தமிழ்நாடு மின்சார வாரியம் சார்பில் ரூ.10 லட்சம், தனியார் ஒப்பந்த நிறுவனம் சார்பில் ரூ.10 லட்சம் நிவாரணம் வழங்கப்பட உள்ளது. கண்ணகி நகரில் பணிக்கு சென்றபோது மின்சாரம் பாய்ந்து தாய்மை பணியாளர் வரலட்சுமி உயிரிழந்தார்.
