×

இந்தியாவை கூட்டாளியாக நடத்த வேண்டும்: குடியரசு கட்சி தலைவர் நிக்கி ஹேலி கருத்து

நியூயார்க்: இந்தியாவை பெருமைமிகு சுதந்திர ஜனநாயக கூட்டாளியாக நடத்த வேண்டும் என குடியரசு கட்சியின் தலைவர்களில் ஒருவரான நிக்கி ஹேலி வலியுறுத்தியுள்ளார். ரஷ்யாவிடம் இருந்து கச்சா எண்ணெய் வாங்குவதன் மூலம் உக்ரைன் போருக்கு இந்தியா மறைமுக நிதி அளிப்பதாக அமெரிக்கா குற்றம் சாட்டியது. இதனால் ரஷ்ய கச்சா எண்ணெயை இறக்குமதி செய்யும் இந்தியா மீது கூடுதலாக 25 % வரி மற்றும் அபராத வரி 25 % என மொத்தம் 50 % வரியை விதித்துள்ளது.

இந்தநிலையில் தெற்கு கரோலினா முன்னாள் கவர்னரும்,குடியரசு கட்சி தலைவர்களில் ஒருவருமான நிக்கி ஹேலி, அமெரிக்க பத்திரிகையில் கட்டுரை எழுதியுள்ளார்.அதில் குறிப்பிட்டுள்ளதாவது: சீனாவை எதிர்கொள்ள இந்தியாவை மதிப்புமிக்க சுதந்திரமான மற்றும் ஜனநாயக பங்காளியாக கருத வேண்டும். இந்தியா உடனான 25 ஆண்டுகால உந்துதலைக் குறைப்பது ஒரு மூலோபாய பேரழிவாக இருக்கும்.ஜனநாயக இந்தியாவின் எழுச்சி கம்யூனிஸ்ட் கட்டுப்பாட்டில் உள்ள சீனாவைப் போலல்லாமல் சுதந்திர உலகத்தை அச்சுறுத்துவதில்லை.

அமெரிக்கா தனது முக்கியமான விநியோகச் சங்கிலிகளை பீஜிங்கிலிருந்து நகர்த்த உதவும் பொருட்களை சீனாவைப் போலவே உற்பத்தி செய்யும் திறன் இந்தியாவுக்கு இருக்கிறது. இந்தியாவின் வளர்ந்து வரும் பாதுகாப்புத் திறன்களும் மத்திய கிழக்கில் அதன் ஈடுபாடும் பிராந்தியத்தை நிலைநிறுத்துவதற்கு அவசியமானது.

இந்தியா உலகின் வேகமாக வளர்ந்து வரும் பெரிய பொருளாதாரம்.விரைவில் அது ஜப்பானை முந்திவிடும். இந்தியாவின் எழுச்சி உலகளாவிய ஒழுங்கை மறுவடிவமைக்கும் சீனாவின் இலக்கிற்கு மிகப்பெரிய தடையாக இருக்கிறது. சீனாவை எதிர்கொள்ள இந்தியாவை மதிப்புமிக்க சுதந்திரமான மற்றும் ஜனநாயக பங்காளியாக கருத வேண்டியது அவசியம். இவ்வாறு அதில்குறிப்பிட்டுள்ளார்.

Tags : India ,Republic Party ,Nikki Haley ,New York ,Republican Party ,Independent Democratic ,United States ,Ukraine ,Russia ,
× RELATED தோஷாகானா ஊழல் தொடர்பான 2வது வழக்கில்...