×

வங்கி அலுவலர் பணி முதல்நிலை தேர்வுக்கான இலவச இணையவழி பயிற்சி வகுப்பு துவக்கம்


கரூர், டிச. 10: கரூர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் வங்கி அலுவலர் பணிக்கான முதல்நிலை தேர்வுக்கான இலவச இணையவழி பயிற்சி வகுப்புகள் தொடங்கப்பட்டுள்ளதாக கலெக்டர் மலர்விழி தெரிவித்துள்ளார். இது குறித்து கலெக்டர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: கரூர் மாவட்ட வேலை வாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் இயங்கி வரும் தன்னார்வ பயிலும் வட்டம் சார்பாக பல்வேறு போட்டித் தேர்வுகளுக்கு இலவச பயிற்சி வகுப்புகள் நடத்தப்பட்டு வருகிறது.தற்போது வங்கி அலுவலர் பணிக்கான முதல்நிலைத் தேர்வு (எஸ்பிஐ-பிஒ) டிசம்பர் 31, ஜனவரி 2, 4 மற்றும் 5ம்தேதிகளில் நடைபெறவுள்ளது. இந்த தேர்வுக்கு டிசம்பர் 8ம்தேதி முதல் இலவச பயிற்சி வகுப்புகள் இணையவழி செயலி மூலமாக கரூர் மாவட்ட வேலை வாய்ப்பு அலுவலத்தில் துவங்கப்பட்டுள்ளது. பயிற்சியின் போது, இலவசமாக பாடக்குறிப்புகள், முந்தைய ஆண்டு மாதிரி வினாத்தாள்கள் வழங்கப்பட்டு மாதிரித் தேர்வுகளும் நடத்தப்படும். பயிற்சி வகுப்பில் கலந்து கொள்ள விருப்பம் உள்ள போட்டித் தேர்வர்கள் தங்களின் விபரங்களை 9360557145 என்ற தொலைபேசி வாயிலாக அல்லது கரூர் மாவட்ட வேலை வாய்ப்பு அலுவலகத்தை நேரடியாக தொடர்பு கொண்டு தங்களுடைய வாட்ஸ் அப் எண்ணை பதிவு செய்து கொள்ளலாம். இவ்வாறு அந்த செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags : Launch ,
× RELATED தனியார் நிறுவன ராக்கெட் ஏவுவதற்கு இஸ்ரோ அனுமதி!!