சென்னை: சென்னை குமரன் நகரில் தடை செய்யப்பட்ட பிட் புல் நாய் கடித்து கருணாகரன் என்பவர் உயிரிழந்துள்ளார். பூங்கொடி என்பவர் வளர்த்து வந்த பிட்புல் ரக நாய் கருணாகரன்(55) என்பவரது தொடை, இடுப்பு பகுதியில் கடித்து குதறியதில் அவர் உயிரிழந்தார். தன்னுடைய வளர்ப்பு நாய் பிட்புல் கடித்ததில் படுகாயமடைந்த பூங்கொடி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
