- பொது குறை மறுசீரமைப்பு நாள்
- அரியலூர் ஆட்சியர் அலுவலகம்
- அரியலூர்
- தினம்
- அரியலூர் மாவட்ட ஊராட்சி
- மாவட்ட கலெக்டர்
- ரத்தினசாமி.…
அரியலூர், ஆக.19: அரியலூர் கலெக்டர் அலுவலகத்தில் நேற்று நடைபெற்ற பொதுமக்கள் குறைதீர்நாள் கூட்டத்தில் 481 மனுக்கள் பெறப்பட்டது. அரியலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகக் கூட்டரங்கில் மக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டம் மாவட்ட கலெக்டர் ரத்தினசாமி, தலைமையில் நேற்று நடைபெற்றது. இக்கூட்டத்தில், பொதுமக்களிடமிருந்து முதியோர் உதவித் தொகை கேட்டும், இலவச வீட்டு மனைப்பட்டா வழங்ககோரியும், மாற்றுத்திறனாளி உதவித்தொகை கேட்டும், தொழில்கடன், பசுமை வீடு உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய 481 மனுக்களை கலெக்டர் பெற்றுக்கொண்டார். மேலும் மனுக்கள் மீது சம்மந்தப்பட்ட துறையை சேர்ந்த அலுவலர்கள் உடனடி நடவடிக்கைகள் மேற்கொள்ளுமாறு வழங்கி கலெக்டர் உத்தரவிட்டார்.இக்கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் மல்லிகா, மாவட்ட நிலை அலுவலர்கள் மற்றும் அனைத்துதுறை அரசு அலுவலர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
