×

வேளாண் சட்டத்திற்கு எதிராக புதுகையில் சங்கு ஊதி போராட்டம்

புதுக்கோட்டை, டிச. 9: மத்திய அரசு கொண்டு வந்துள்ள விவசாயிகளுக்கு விரோதமான சட்டங்களை ரத்து செய்யக்கோரியும், டெல்லியில் போராடி வரும் விவசாயிகளின் குரலுக்கு மத்திய அரசு செவிமடுக்க வேண்டியும் தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் சார்பில் புதுக்கோட்டையில் அரசியல் கட்சியினர் நேற்று சங்கு ஊதி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். புதுக்கோட்டை உழவர் சந்தை அருகே நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்துக்கு வாழ்வுரிமைக் கட்சியின் மாவட்ட செயலர் நியாஸ் அகமது தலைமை வகித்தார். திமுக வடக்கு மாவட்ட பொறுப்பாளர். செல்லபாண்டியன், தமுமுக சார்பில் அப்துல்கனி, எஸ்டிபிஐ சார்பில் முபாரக், ஆம் ஆத்மி கட்சியின் சார்பில் அப்துல்ஜப்பார் உள்ளிட்டோரும் பங்கேற்றனர்.

Tags : protest ,
× RELATED பஞ்சாப்- அரியானா எல்லையில் 100வது நாள்...