×

உத்தமபாளையத்தில் மழைக்கு சாய்ந்தது நெல் பயிர்கள் விவசாயிகள் கவலை

உத்தமபாளையம், டிச. 9: உத்தமபாளையம், சின்னமனூர், ராயப்பன்பட்டி, ராமசாமி நாயக்கன்பட்டி உள்ளிட்ட ஊர்களில் கனமழை பெய்து வருகிறது. இதனால் மண்சுவர் வீடுகளில் வசிப்பவர்கள் கலக்கமடைந்துள்ளனர். மேலும் நெல், கொத்தமல்லி உள்ளிட்ட பல்வேறு பயிர்கள் தண்ணீரில் மூழ்கி சாய்ந்தன. குறிப்பாக நன்கு விளைந்து அறுவடைக்கு ஒரு மாதமே உள்ள நிலையில் இருந்த நெற்பயிர்கள் மழைக்கு சாய்ந்ததால் பெரும் நஷ்டம் ஏற்பட்டுள்ளது.  இதனால் விவசாயிகள் கலக்கமடைந்துள்ளனர். இதேபோல் பல இடங்களில் உள்ள வயல்களில் மழைநீர் தேங்கி உள்ளதுடன், தொடர்மழை பெய்து வருவதால் விவசாயிகள் கலக்கமடைந்துள்ளனர்.

Tags : Paddy farmers ,
× RELATED சிவகங்கை மாவட்டத்தில் கொள்முதல்...