×

ரூ.60 கோடி பண மோசடி புகாரில் நடிகை ஷில்பா ஷெட்டி, கணவர் ராஜ்குந்த்ரா மீது வழக்குப்பதிவு

மும்பை: பெஸ்ட் டீல் டிவி பிரைவேட் லிமிடெட் எனும் ஆன்லைன் ஷாப்பிங் நிறுவனத்தின் இயக்குநராக நடிகை ஷில்பா ஷெட்டியும், ராஜ்குந்த்ராவும் இருந்தனர். இந்த நிறுவனத்தை விரிவாக்கம் செய்வதற்காக ஷில்பா ஷெட்டியும், ராஜ்குந்த்ராவும் ஜுகுவைச் சேர்ந்த தொழிலதிபர் தீபக் கோத்தாரியை (60) அணுகியுள்ளனர். அவரிடம் 2015 – 2024 காலக்கட்டத்தில் மொத்தம் ரூ.60.4 கோடி கடன் வழங்கி உள்ளார்.

ஆனால் கடனை வாங்கிய பிறகு, ஷில்பா ஷெட்டி 2016ல் நிறுவனத்தின் இயக்குநர் பதவியில் இருந்து ராஜினாமா செய்துள்ளார். பின்னர், அந்நிறுவனத்தின் மீது திவால் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளது. இதனை கோத்தாரியிடம் தெரிவிக்கவில்லை. இதையடுத்து தொழிலதிபர் கோத்தாரி, ஷில்பா ஷெட்டி மற்றும் அவரது கணவருக்கு எதிராக ஜுகு போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தார்.

தொழிலுக்காக வாங்கிய பணத்தை இருவரும் தங்களது சொந்த செலவீனங்களுக்காக பயன்படுத்தியதாக குற்றம் சாட்டினார். அதன் பேரில், ஷில்பா ஷெட்டி, அவரது கணவர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். இந்த வழக்கு மும்பை காவல்துறையின் பொருளாதார குற்றப்பிரிவு போலீஸ் விசாரணைக்கு மாற்றப்பட்டுள்ளது.

Tags : Shilpa Shetty ,Raj Kundra ,Mumbai ,Best Deal TV Private Limited ,Jugu ,Deepak Kothari ,
× RELATED குளிர்கால கூட்டத்தொடர் கடந்த 1ம் தேதி...