×

உத்தமபாளையத்தில் காங்கிரஸ் சார்பில் ஏர் கலப்பை பேரணி கண்டன ஆர்ப்பாட்டம் வேளாண் சட்டங்களை திரும்ப பெற வலியுறுத்தல்


உத்தமபாளையம், டிச. 8: உத்தமபாளையத்தில் காங்கிரஸ் கமிட்டி சார்பில் நடந்த ஏர் கலப்பை பேரணி மற்றும் ஆர்ப்பாட்டத்திற்கு வட்டார காங்கிரஸ் தலைவர் முகைதீன் அப்துல் காதர் தலைமை வகித்தார். நகர தலைவர் கபார்கான் முன்னிலை வகித்தார். மாவட்ட காங்கிரஸ் தலைவர் எம்.பி.முருகேசன் மாநில பேச்சாளர் பாரதன், பொருளாளர் அப்பு என்ற பாலசுப்பிரமணியன் ஆகியோர் பேசினர். தேரடியில் ஆர்ப்பாட்டம் நடந்தது. இதில், ‘மத்திய அரசின் வேளாண்மை திருத்த சட்டங்களை திரும்ப பெற வேண்டும். விவசாயிகள் உரிமையை பாதுகாக்க வேண்டும் என கோஷமிட்டனர். தொடர்ந்து ஏர் கலப்பையுடன் தேரடியில் இருந்து ஊர்வலமாக புறப்பட்டனர்.

அப்போது, ‘மத்திய பாஜ அரசையும், மக்கள் விரோத சட்டங்களையும் கண்டித்து கோஷம் எழுப்பினர். அவர்களை உத்தமபாளையம் டி.எஸ்.பி. சின்னகண்ணு, இன்ஸ்பெக்டர் முருகன் ஆகியோர் தடுத்து நிறுத்தினர். போராட்டத்தில் மாவட்ட துணை தலைவர் முபாரக், என்.எஸ்.சலேத், வட்டாரத்தலைவர்கள் ஜீவா, புருஷோத்தமன், முருகன், நிர்வாகிகள் ஜோசப் மனோகரன், வக்கீல் சத்யமூர்த்தி, துரைப்பாண்டியன், கம்பம் போஸ், நைனார் முகமது, முசாக் மந்திரி, ஜெயபிரகாஷ், மகிளா காங்கிரஸ் கிருஷ்ணவேணி, பாளையம் பர்மான் அலி, உள்ளிட்ட ஏராளமான காங்கிரஸ் கட்சியினர் கொட்டிய மழையையும் பொருட்படுத்தாமல் கலந்து கொண்டனர்.

Tags : Uththamapalaiyam Demonstration ,Congress ,withdrawal ,
× RELATED நெல்லை மாவட்ட காங்கிரஸ் தலைவர் கொலை:...