×

வேலூர் பிரியாணி கடைக்காரர் வீட்டில் 50 சவரன் திருடிய வழக்கில் ஆந்திராவில் 2 பேர் கைது 100 சவரன் நகைகள் பறிமுதல்

வேலூர், டிச.8: வேலூர் பிரியாணி கடைக்காரர் வீட்டில் 250 சவரன் திருடிய வழக்கில், 2 பேரை ஆந்திராவில் கைது செய்த தனிப்படை போலீசார், 100 சவரன் நகைளை பறிமுதல் செய்தனர். வேலூர் கொசப்பேட்டை அசோகநடேசன் தெருவைச் சேர்ந்தவர் மோகன்(60). இவர் பழைய பேருந்து நிலையத்தில் பிரியாணி கடை நடத்தி வருகிறார். இவரது வீட்டில் கடந்த 22ம் தேதி 250 சவரன் தங்க நகைகள் திருட்டு போனது. இதில் குற்றவாளிகளை பிடிக்க வேலூர் ஏஎஸ்பி ஆல்பர்ட்ஜான், டிஎஸ்பி திருநாவுக்கரசு தலைமையில் 3 தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளது.இந்நிலையில், கொள்ளையர்கள் ஆந்திர மாநிலம் குண்டூரில் பதுங்கி இருப்பதாக தனிப்படை போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அதன்பேரில், அங்கு சென்ற தனிப்படை போலீசார் நேற்று முன்தினம் கொள்ளையர்கள் பதுங்கியிருந்த வீட்டை சுற்றி வளைத்தனர். அப்போது கொள்ளையர்கள் தப்பியோடினர். போலீசார் விரட்டியதில் ஆந்திராவை சேர்ந்த 2 பேர் பிடிபட்டனர். தொடர்ந்து அவர்கள் வீட்டில் சோதனை நடத்தியதில் 100 சவரன் நகைகள் பறிமுதல் செய்யப்பட்டது. தொடர்ந்து பிடிபட்ட ஆந்திர வாலிபர்கள் 2 பேரை கைது செய்த போலீசார், தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் தப்பி ஓடிய கும்பலை தேடி வருகின்றனர்.

Tags : Andhra Pradesh ,persons ,theft ,biryani shopkeeper ,Vellore ,house ,
× RELATED கொளுத்தும் வெயிலுக்கு மரம்...