×

மின்சாரம் தாக்கி 9ம் வகுப்பு மாணவி பலி

ஆவடி: ஆவடியை அடுத்த பட்டாபிராம், கக்கன்ஜி நகர் பகுதியைச் சேர்ந்தவர் சரவணன் (35). இவர் அம்பத்தூரில் உள்ள தனியார் நிறுவனத்தில் பணியாற்றி வருகிறார். இவரது மகள் சுவேதா(14) அதே பகுதியில் உள்ள அரசு மேல்நிலைப் பள்ளியில் 9ம் வகுப்பு படித்து வந்தார். நேற்று மாலை 5 மணியளவில், வீட்டு ஹாலில் உள்ள லைட் சுவிட்சை ஆன் செய்தபோது சிறுமி சுவேதா மீது மின்சாரம் பாய்ந்தது. இதில் சம்பவ இடத்திலேயே சிறுமி மயங்கி விழுந்தாள்.

அப்போது வீட்டில் இருந்த உறவினர்கள், சிறுமியை மீட்டு ஆவடி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு சிறுமியை பரிசோதித்த மருத்துவர்கள், ஏற்கனவே அவர் இறந்துவிட்டதாகத் தெரிவித்தனர். இதனால் சிறுமியின் குடும்பத்தினர் கதறி அழுதனர். இதுகுறித்து பட்டாபிராம் போலீசார் வழக்குப்பதிவு செய்து, சிறுமியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

The post மின்சாரம் தாக்கி 9ம் வகுப்பு மாணவி பலி appeared first on Dinakaran.

Tags : Avadi ,Saravanan ,Kakanji Nagar, Pattabram ,Ambattur ,Dinakaran ,
× RELATED ஆவடி நகைக்கடை கொள்ளை: 8 தனிப்படைகள் அமைப்பு!