×

திருவண்ணாமலையில் மலை மீது ஏறி நடிகை சஞ்சிதா ஷெட்டி தீப தரிசனம்

திருவண்ணாமலை, டிச. 7: திருவண்ணாமலையில், 2,668 அடி உயரமுள்ள மலை மீது சென்று மகா தீபத்தை தரிசனம் செய்த படங்களை நடிகை சஞ்சிதா ஷெட்டி தன்னுடைய இன்ஸ்ட்ராகிராமில் பதிவு செய்துள்ளார். திருவண்ணாமலையில் கார்த்திகை தீபத்திருவிழாவை முன்னிட்டு, கடந்த 29ம் ேததி மகா தீபம் ஏற்றப்பட்டது. தொடர்ந்து, வரும் 9ம் தேதி வரை மகா தீபம் மலை மீது காட்சிதரும். இந்நிலையில், சூதுகவ்வும் உள்ளிட்ட தமிழ் திரைப்படங்களில் நடித்துள்ள நடிகை சஞ்சிதா ஷெட்டி, கடந்த சில நாட்களுக்கு முன்பு 2,668 அடி உயர மலையில் ஏற்றப்பட்டுள்ள மகா தீபத்தை நேரில் சென்று தரிசனம் செய்தார். மேலும், மலையில் மகா தீபத்தை தரிசனம் செய்த படங்களை, தன்னுடைய இன்ஸ்ட்ராகிராமில் பதிவேற்றம் செய்தார். அதோடு, மலை உச்சிக்கு செல்ல 1.40 மணிநேரம் ஆனதாகவும், அங்கிருந்து கீழே இறங்க 2.30 மணி நேரமானதாகவும், மலையேறியது உண்மையிலேயே அதிசயமாக உள்ளது எனவும் தன்னுடைய பதிவில் குறிப்பிட்டுள்ளார்.

Tags : Sanchita Shetty Deepa Darshan ,Thiruvannamalai ,hill ,
× RELATED வனத்துறை பராமரித்து வந்த 25...