×

மூதாட்டியை தாக்கி பாலியல் தொல்லைவாலிபர் மீது போலீசார் வழக்குபதிவு

நாமகிரிப்பேட்டை, ஏப்.5: நாமகிரிப்பேட்டை அருகே பணம் தர மறுத்த 85 வயது மூதாட்டியை தாக்கி, பாலியல் தொல்லை கொடுத்த, 27 வயது வாலிபர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரிக்கின்றனர். நாமக்கல் மாவட்டம் நாமகிரிப்பேட்டை அடுத்த அரியாகுழந்தைபுதூர் பகுதியை சேர்ந்த ராமசாமி மனைவி நல்லம்மாள்(85). இவர் தனியாக வசித்து வருகிறார். அதே பகுதியை சேர்ந்த நடராஜன் மகன் நித்தியராஜவேலன்(27). கூலித்தொழிலாளியான இவர் கடந்த 2 நாட்களுக்கு முன்பு, நல்லம்மாளிடம் பணம் கேட்டுள்ளார். அவர் தர மறுத்ததால் ஆத்திரமடைந்தவர், நல்லம்மாளை தாக்கியதுடன், பாலியல் தொந்தரவும் செய்ததாக கூறப்படுகிறது. இதில் காயமடைந்த நல்லம்மாளை, அக்கம்பக்கத்தினர் மற்றும் உறவினர்கள் மீட்டு, நாமக்கல் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். இதுகுறித்த நேற்று நல்லம்மாள் கொடுத்த புகாரின் பேரில், பரமத்திவேலூர் போலீசார் வழக்கு பதிவு செய்து, நித்தியராஜவேலனிடம் விசாரணை நடத்தி வருகின்றனர். பணம் கேட்டு தரமறுத்த மூதாட்டியை வாலிபர் தாக்கி, பாலியல் தொந்தரவு கொடுத்த சம்பவம், அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

The post மூதாட்டியை தாக்கி பாலியல் தொல்லை
வாலிபர் மீது போலீசார் வழக்குபதிவு
appeared first on Dinakaran.

Tags : Namakrippet ,
× RELATED சாலையில் பெருக்கெடுத்து ஓடிய 1.5 லட்சம் முட்டைகள்