×

பந்தலூரில் காங்கிரஸ் சார்பில் ஏர்கலப்பை பேரணி

பந்தலூர்,டிச.7: பந்தலூரில் காங்கிரஸ் சார்பில், ஏர்கலப்பை பேரணி நடந்தது. மத்திய பா.ஜ., அரசின் வேளாண் சட்ட மசோதவை கண்டித்தும், டெல்லியில் போராடி வரும் விவசாயிகளுக்கு ஆதரவு தெரிவித்து நேற்று பந்தலூர் பஜாரில் காங்கிரஸ் சார்பில் ஏர்கலப்பை பேரணி மற்றும் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்தில் மத்திய அரசை கண்டித்து கோஷங்கள் எழுப்பினர். இந்நிகழ்ச்சியில் காங்கிரஸ் மாவட்ட தலைவரும், ஊட்டி எம்.எல்.ஏ.,வுமான கணேஷ் தலைமை வகித்தார். மாநில உறுப்பினர்கள் கோஷி பேபி மற்றும் முகமது ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

அகில இந்திய காங்கிரஸ் கட்சி உறுப்பினர் சுப்பிரமணி, ஊட்டி வட்டாரத்தலைவர் நாகராஜ், கூடலூர் வட்டார தலைவர் அஷ்ரப், நெல்லியாளம் நகர தலைவர் கோபிநாதன், கூடலூர் நகர தலைவர் அப்துல்ரஹ்மான், சேரங்கோடு பஞ்சாயத்து தலைவர் அவராச்சன், ஓவேலி பஞ்சாயத் தலைவர் இப்னு ஜோஸ் குட்டி மற்றும் நிர்வாகிகள் பாபு, சாலப்பரம்பன், சைது முஹம்மது, குஞ்சாப்பி, ஷாஜி சலிவயல், ஹம்சா, ஜெய்சல் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.

Tags : rally ,Air Congress ,Pandharpur ,
× RELATED அர்ஜெண்டினாவில்...