×

சைவம், வைணவம் குறித்து சர்ச்சை பேச்சு பொன்முடிக்கு எதிரான வழக்குகள் முடித்துவைப்பு: உயர் நீதிமன்றத்தில் தமிழக அரசு தகவல்

 

சென்னை: சைவ, வைணவ சமயங்கள் மற்றும் பெண்கள் குறித்து சர்ச்சைக்குரிய வகையில் கருத்து தெரிவித்ததாக முன்னாள் அமைச்சர் பொன்முடிக்கு எதிராக சென்னை உயர் நீதிமன்றம் தாமாக முன்வந்து வழக்கை விசாரணைக்கு எடுத்திருந்தது. இந்த வழக்கு நீதிபதி பி.வேல்முருகன் முன்பு நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தபோது, தமிழ்நாடு அட்வகேட் ஜெனரல் பி.எஸ்.ராமன் ஆஜராகி, பொன்முடிக்கு எதிராக பெறப்பட்ட 115 புகார்கள் முடித்து வைக்கப்பட்டு புகார்தாரர்களுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டதாக கூறினார்.

இதைக்கேட்ட நீதிபதி, புகார்கள் முடித்து வைக்கப்பட்டது குறித்து புகார்தாரர்களிடம் ஒப்புகை பெறப்பட்டதா? என்று கேட்டார். இதற்கு பதிலளித்த அட்வகேட் ஜெனரல், புகார்தாரர்கள் அனைவரிடமும் ஒப்புகை பெறப்பட்டுள்ளதாக கூறினார். இதையடுத்து நீதிபதி, இதை அறிக்கையாக தாக்கல் செய்யுமாறு உத்தரவிட்டு விசாரணையை வரும் 14ம் தேதிக்கு தள்ளிவைத்தார்.

 

Tags : Ponmudi ,Saivism ,Vaishnavism ,Tamil Nadu government ,High Court ,Chennai ,Madras High Court ,minister ,Justice ,P. Velmurugan ,Tamil ,Nadu ,Advocate General ,P.S. Raman ,
× RELATED இறுதி சடங்கு செலவுக்கு பணம்...