×

நெல்லையில் நள்ளிரவு பயங்கரம்; உணவு சப்ளை செய்யும் நிறுவன ஊழியர் வெட்டிக்கொலை: மர்ம நபர்கள் வெறிச்செயல்

நெல்லை: நெல்லையில் நேற்று நள்ளிரவு உணவு சப்ளை செய்யும் நிறுவன ஊழியர், மர்மநபர்களால் வெட்டி படுகொலை செய்யப்பட்டார். இந்த சம்பவத்தையொட்டி அங்கு பதற்றம் நிலவுவதால் போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். பாளையங்கோட்டை கொக்கிரகுளம் மேலவீரராகவபுரத்தை சேர்ந்தவர் சோமு மகன் முகேஷ் (30). இவருக்கு மனைவி சுபிதா, ஒரு மகன் ஆகியோர் உள்ளனர். முகேஷ் அப்பகுதியில் கடந்த 7 ஆண்டுகளாக ஊர் நாட்டாண்மையாக இருந்து வந்தார்.

இந்நிலையில் கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு ஊர்நாட்டாண்மை பொறுப்பை ராஜினாமா செய்து விட்டார். அதன்பிறகு வண்ணார்பேட்டையில் பைக்கில் உணவுகளை வீடுகளுக்கு சப்ளை செய்யும் நிறுவனத்தில் ஊழியராக வேலை பார்த்து வந்தார். இவருக்கும், அப்பகுதியை சேர்ந்த முருகேசன், அழகுமுத்து, மகாராஜன் ஆகியோருக்கும் இடையே ஊர் நாட்டாண்மை மற்றும் கொடை விழா தர்மகர்த்தா பொறுப்புக்கள் தொடர்பாக முன்விரோதம் இருந்து வருகிறது. நேற்று வழக்கம் போல் வேலை முடிந்து நள்ளிரவு 12 மணிக்கு பைக்கில் வீட்டிற்கு திரும்பிக்கொண்டிருந்தார். குருந்துடையார்புரம் அருகே சென்ற போது அவரை வழிமறித்த மர்ம நபர்கள் முகேஷிடம் தகராறு செய்து அரிவாளால் வெட்டினர்.

இதையடுத்து அவர், பைக்கை கீழே போட்டு விட்டு தப்பியோடினார். ஆனாலும் மர்ம நபர்கள் அவரை விடாமல் துரத்தி சென்று சரமாரியாக வெட்டினர். இதில் முகேஷ், சம்பவ இடத்திலேயே ரத்த வெள்ளத்தில் இறந்தார்.
தகவல் அறிந்து போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை நடத்தினர். பின்னர் முகேஷ் உடலை மீட்டு நெல்லை அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து பாளை போலீசார் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர். தொடர்ந்து அங்கு பதற்றம் நிலவுவதால் போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.

The post நெல்லையில் நள்ளிரவு பயங்கரம்; உணவு சப்ளை செய்யும் நிறுவன ஊழியர் வெட்டிக்கொலை: மர்ம நபர்கள் வெறிச்செயல் appeared first on Dinakaran.

Tags : Midnight ,Nellai ,
× RELATED இலங்கையில் நள்ளிரவு 12 மணி முதல் பழைய...