×

நீட் தேர்வில் தோல்வி மாணவர் தற்கொலை

பட்டுக்கோட்டை: நீட்தேர்வில் தேர்ச்சி பெறாத விரக்தியில் மாணவர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். தஞ்சாவூர் மாவட்டம், பட்டுக்கோட்டை அடுத்த சிலம்பவேளாங்காடு கிராமத்தை சேர்ந்தவர் செந்தில்குமார். இவரது மனைவி சாந்தி. விவசாய கூலித்தொழிலாளர்கள். இவர்களது இரண்டாவது மகன் தனுஷ் கடந்த 2021ம் வருடம் பிளஸ் 2 படித்து முடித்து, 2 ஆண்டுகளாக ‘நீட்’ தேர்வு எழுதி வந்தார். அதில், அவர் தேர்ச்சி பெறவில்லை. இந்நிலையில் நேற்று காலை பெற்றோர் கூலிவேலைக்கு சென்றனர்.

அப்போது வீட்டில் தனியாக இருந்த தனுஷ், தனது வீட்டில் சேலையால் தூக்குமாட்டி கொண்டார். இதில் அவரது அலறல் சத்தம் கேட்டு அருகிலிருந்தவர்கள் வந்து பார்த்து போது தனுஷ் தூக்கில் தொங்கியது கண்டு அதிர்ச்சியடைந்தனர். இதனையடுத்து தனுஷை மீட்டு சிகிச்சைக்காக பட்டுக்கோட்டை அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள், அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். இதுகுறித்து மதுக்கூர் போலீசார் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.

The post நீட் தேர்வில் தோல்வி மாணவர் தற்கொலை appeared first on Dinakaran.

Tags : Pattukottai ,Senthilkumar ,Silambavelangadu village ,Thanjavur district ,Shanti ,Dhanush ,Dinakaran ,
× RELATED பட்டுக்கோட்டை அரசு மாதிரி பள்ளியில்...