- எம்பிபிஎஸ்
- சென்னை
- சென்னை உயர் நீதிமன்றம்
- பிடிஎஸ்
- சாதனா
- திருவல்லூர்
- மருத்துவ கல்வி இயக்குநரகம்
- தின மலர்

சென்னை: எம்பிபிஎஸ், பிடிஎஸ் மருத்துவப் படிப்புக்கான விண்ணப்பங்களை திருத்தி சமர்பிக்க அவகாசம் வழங்கி சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. திருவள்ளூரை சேர்ந்த மாணவி சாதனா சென்னை உயர்நீதிமன்றம் வழக்கு தொடர்ந்திருந்தார். அந்த மனுவில், ஜூலை 15ம் தேதி மருத்துவக் கல்வி இயக்குனரகம் வெளியிட்ட அறிவிப்பில், தன்னோடு சேர்த்து சுமார் 1800 மாணவர்களின் விண்ணப்பத்தில் குறைபாடு உள்ளதாகக்கூறி நிராகரித்த நிலையில் மீண்டும் விண்ணப்பிக்க கால அவகாசம் கோரி மாணவி வழக்கு தொடரப்பட்டது.
இந்த வழக்கு நீதிபதி குமரப்பன் முன்பு இன்று விசாரணைக்கு வந்தது. மருத்துவக் கல்வி இயக்குனரகம் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், 18ம் தேதியுடன் கால அவகாசம் முடிந்த நிலையில், மாணவர்கள் முறையிட்டதால் இன்று மாலை 5 மணி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. எனவே விண்ணப்பத்தில் உள்ள குறைகளை நிவர்த்தி செய்து இன்று மாலை 5 மணிக்குள் விண்ணப்பிக்கலாம் என மருத்துவக் கல்வி இயக்குனரகம் சார்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் தகவல் தெரிவிக்கப்பட்டது. இந்த உத்திரவாதத்தை பதிவு செய்து கொண்ட நீதிபதி, இந்த வழக்கு முடித்து வைக்கத்து உத்தரவிட்டார்.
The post எம்பிபிஎஸ், பிடிஎஸ் மருத்துவப் படிப்பு.. விண்ணப்பங்களை திருத்த சமர்ப்பிக்க அவகாசம்..!! appeared first on Dinakaran.
