×

புதுச்சத்திரம் பெரியபாளையத்தம்மன் கோயிலில் 48வது நாள் மண்டல பூஜை

திருவள்ளூர்: புதுச்சத்திரம், பெரியபாளையத்தம்மன் கோயிலில் 48வது நாள் மண்டல பூஜை நடைப்பெற்றது. பூந்தமல்லி அடுத்த கொரட்டூர் ஊராட்சி புதுச்சத்திரம் கிராமத்தில் உள்ள அகிலாண்டகோடி பிரம்மாண்டநாயகி ஸ்ரீ பெரியபாளையத்தம்மன் கோயிலில் கடந்த ஜூன் 1 ஆம் தேதி மஹா கும்பாபிஷேகம் நடைபெற்றது. இதை முன்னிட்டு கடந்த மே 29, 30 மற்றும் 31 ந் தேதி ஆகிய 3 நாட்களும் சிறப்பு பூஜைகளும், தீபாராதனையும் நடைபெற்றது. இதனையடுத்து ஜூன் 1ம் தேதி காலை விமான கும்பாபிஷேகமும், உற்சவர் கும்பாபிஷேகமும், மஹா அபிஷேகமும் மற்றும் தீபாராதனையும் நடைபெற்றது.

இந்நிலையில், தொடர்ந்து 47 நாட்களாக ஸ்ரீ பெரியபாளையத்தம்மனுக்கு மண்டல அபிஷேகம் நடைபெற்று வந்தது. 48 வது நாளான நேற்று ஊராட்சி மன்ற தலைவர் ஏ.கந்தபாபு தலைமையில், மண்டல அபிஷேகம் நடைபெற்றது. இதில் கோயில் நிர்வாகிகள் மற்றும் கிராம பொதுமக்கள் ஏராளமானோர் கலந்து கொண்டு அம்மனை வழிபட்டனர். இந்த மண்டல அபிஷேகத்திற்கான ஏற்பாடுகளை விழா குழுவினர்கள் மற்றும் கிராமமக்கள் செய்திருந்தனர்.

The post புதுச்சத்திரம் பெரியபாளையத்தம்மன் கோயிலில் 48வது நாள் மண்டல பூஜை appeared first on Dinakaran.

Tags : Zonal Puja ,Puduchtram Periyapalayathamman Temple ,Thiruvallur ,Periyapalayathamman Temple ,Puduchatram ,Koratur Puduchiram village ,Puduchathram Periyapalayathamman Temple ,48th Day Zonal Puja ,
× RELATED மின் நுகர்வோர் குறைதீர் கூட்டம்