×

தீரன் சின்னமலையின் நினைவு நாளில் அநீதிகளைக் களையவதற்கு உறுதியேற்றுக் கொள்வோம்: அன்புமணி ராமதாஸ்

சென்னை: புரட்சியாளன் தீரன் சின்னமலையின் 219-ஆவது நினைவு நாளில், அநீதிகளைக் களையவதற்கு உறுதியேற்றுக் கொள்வோம் என பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்; இந்திய விடுதலைப் போராட்டத்தின் ஈடு இணையற்ற புரட்சியாளர் தீரன் சின்னமலை எனப்படும் தீர்த்தகிரி கவுண்டர் சூழ்ச்சியாலும், சதியாலும் வீழ்த்தப்பட்டதன் 219-ஆம் நினைவு நாள் இன்று. ஆங்கிலேயர்களைக் கண்டு பிற மன்னர்கள் அஞ்சிய நிலையில், ஆங்கிலேயர்களை அடுத்தடுத்து மூன்று போர்களில் வீழ்த்தி அஞ்ச வைத்த வரலாறு தீரனுக்கு உண்டு. வீரத்தின் விளைநிலமாக திகழ்ந்த அவர், கொடைகளை வழங்குவதில் கோமானாக திகழ்ந்தார்.

தன்னிடமிருந்த பணத்தை மக்களுக்கு வாரி வழங்கியவர். கொங்கு நாட்டில் இருந்து மைசூர் மன்னரால் வசூலித்துச் செல்லப்பட்ட வரிப்பணத்தை பறித்து ஏழை, எளிய மக்களுக்கு வழங்கிய வீரன் சின்னமலை. இளம் வயதிலேயே எண்ணற்ற சாதனைகளை படைத்து, வரலாற்றில் இடம் பெற்ற தீரன் சின்னமலையில் தியாகங்கள் இன்னும் மக்களிடம் முழுமையாக சென்றடையவில்லை. அதை மக்களிடம் கொண்டு செல்ல வேண்டியதும், அவரைப் போலவே அநீதிகளை எதிர்த்து போராட வேண்டியதும் நமது கடமை. அந்தக் கடமையை நிறைவேற்ற இந்த நாளில் நாம் உறுதியேற்றுக் கொள்வோம் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

The post தீரன் சின்னமலையின் நினைவு நாளில் அநீதிகளைக் களையவதற்கு உறுதியேற்றுக் கொள்வோம்: அன்புமணி ராமதாஸ் appeared first on Dinakaran.

Tags : Theeran Chinnamalai ,Anbumani Ramadoss ,CHENNAI ,BAMA ,President ,Anbumani ,
× RELATED திரைப்பட இயக்குனர் மோகனை விடுதலை...