×

சட்டமன்ற நடவடிக்கைகளை முழுவதும் நேரடி ஒளிபரப்பு செய்வதில் என்ன பிரச்சினை உள்ளது?: தமிழ்நாடு அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் கேள்வி

சென்னை: சட்டமன்ற நிகழ்வுகளை நேரடி ஒளிபரப்பு செய்ய வேண்டும் என மறைந்த தேமுதிக தலைவர் விஜயகாந்த் உள்ளிட்டோர் சென்னை உயர்நீதிமன்றத்தில் பல ஆண்டுகளுக்கு முன்னதாகவே வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கு நிலுவையில் இருந்து வந்தது. இந்த வழக்கு இன்று மீண்டும் தலைமை நீதிபதி அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது விஜயகாந்த் மறைந்த விவரம் தெரிவிக்கப்பட்டது.

அதேபோல சட்டபூர்வமான பிரதிநிதி மூலமாக இந்த வழக்கை தொடர இருப்பதாகவும் விளக்கம் கொடுக்கப்பட்டது. இந்த வழக்கில் தமிழக அரசை பொறுத்தவரையில் தமிழக சட்ட மன்றத்தில் கேள்வி நேரம் , கவன ஈர்ப்பு தீர்மானங்கள் மீதான விவாதங்கள், ஆளுநர் உரை, பட்ஜெட் உரைகள், அமைச்சர்களுடைய பதிலுரைகள் தற்போது நேரடியாக ஒளிபரப்பு செய்யப்பட்டு வருவதாக விளக்கம் தமிழக அரசு சார்பில் விளக்கம் கொடுக்கப்பட்டது.

அதே போல் சட்டமன்றத்தில் உறுப்பினருடைய பேச்சுகள் அவை குறிப்புக்கள் நீக்கப்படும் போது அவை நேரடியாக ஒளிபரப்பு செய்யப்பட வாய்ப்புள்ளதால் அந்த சபை நடவடிக்கை நேரடியாக ஒளிபரப்பு செய்ய வாய்ப்பு இல்லை என்ற விளக்கமும் தமிழக அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

இதனை கேட்ட நீதிபதிகள் நாடாளுமன்றத்தில் அனைத்து நடவடிக்கைகளும் நேரடி ஒளிபரப்பு செய்யப்படுகிறது. அதே போல தமிழக சட்டமன்ற நடவடிக்கைகளை முழுவதுமாக நேரடி ஒளிபரப்பு செய்வதில் என்ன பிரச்சனை உள்ளது என்று கேள்வி எழுப்பினார்கள். அதுமட்டுமல்லாமல் இந்த விவகாரம் தொடர்பாக உரிய விளக்கம் அளிக்க தமிழ்நாடு அரசுக்கு உத்தரவிட்ட சென்னை உயர்நீதிமன்றம் இந்த வழக்கின் விசாரணையை மார்ச் 11 தேதிக்கு தள்ளிவைத்து உத்தரவிட்டுள்ளது.

The post சட்டமன்ற நடவடிக்கைகளை முழுவதும் நேரடி ஒளிபரப்பு செய்வதில் என்ன பிரச்சினை உள்ளது?: தமிழ்நாடு அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் கேள்வி appeared first on Dinakaran.

Tags : Madras High Court ,Tamil Nadu government ,CHENNAI ,DMDK ,Vijayakanth ,Dinakaran ,
× RELATED தனியார் பள்ளிக்கான புதிய சட்டத்துக்கு எதிராக மனு