×

அதிகாரத்தில் இருப்பவர்கள் மீது நடவடிக்கை எடுக்கும் வகையில் சட்டம் வலிமையாக இருக்க வேண்டும்: உயர்நீதிமன்ற கிளை!

மதுரை: அதிகாரத்தில் இருப்பவர்கள் மீது நடவடிக்கை எடுக்கும் வகையில் சட்டம் வலிமையாக இருக்க வேண்டும் என உயர்நீதிமன்ற மதுரை கிளை தெரிவித்துள்ளது. செல்வாக்கு உள்ளவர் மீது நடவடிக்கை எடுத்தால் மட்டுமே சட்டம் இருப்பதற்கு அர்த்தம் இருக்கும் என நீதிபதி ஆனந்த் வெங்டேஷ் கூறியுள்ளார். அதிகாரம், செல்வாக்கு மிக்கவர் மீது நடவடிக்கை எடுக்காவிடில் சட்டம் இருந்தும் பயனில்லை. தனது நிலத்தில் சட்டவிரோதமாக கிராவல் மண் எடுத்தவர் மீது நடவடிக்கை கோரி திருச்சியைச் சேர்ந்த மங்களம் மனு தாக்கல் செய்துள்ளார். லால்குடி புஞ்சை சங்கேந்தி கிராமத்தில் உள்ள தனது நிலத்தில் ராஜா என்பவர் சட்ட விரோதமாக கிராவல் மண் எடுத்துள்ளார்.

 

The post அதிகாரத்தில் இருப்பவர்கள் மீது நடவடிக்கை எடுக்கும் வகையில் சட்டம் வலிமையாக இருக்க வேண்டும்: உயர்நீதிமன்ற கிளை! appeared first on Dinakaran.

Tags : High Court ,Madurai ,Dinakaran ,
× RELATED கட்டணத்தை உயர்த்தினாலும் முறையாக...