சென்னை: கலைஞர் மகளிர் உரிமைத்தொகை திட்டம் தொடர்பாக மூத்த அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகளுடன் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆலோசனை நடத்தி வருகிறார். இதுவரை 1.48 கோடி பேர் விண்ணப்பித்துள்ள நிலையில், திட்டத்தை சிறப்பாக செயல்படுத்துவது குறித்து அமைச்சர்கள் துரைமுருகன், ஐ.பெரியசாமி, உதயநிதி உள்ளிட்டோருடன் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் விரிவான ஆலோசனையில் ஈடுபட்டுள்ளார். திட்டத்துக்கான வழிகாட்டு நெறிமுறைகள் வெளியிடப்பட்டு 3 கட்டங்களாக சிறப்பு முகாம்கள் நடைபெறுகின்றன. விண்ணப்பிக்க தவறியவர்கள் ஆக.19, 20 தேதிகளில், சிறப்பு முகாம்களில் விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.
The post கலைஞர் மகளிர் உரிமைத்தொகை திட்டம் தொடர்பாக மூத்த அமைச்சர்கள், அதிகாரிகளுடன் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆலோசனை..!! appeared first on Dinakaran.