×

ஜெஎஸ்எஸ் பள்ளியில் கோடை கால ஆன்மீக கலாச்சார பயிற்சி முகாம்

 

ஊட்டி, ஏப். 26: ஊட்டி தீட்டுகல் ஜெஎஸ்எஸ் பள்ளியில் மைசூர் சுத்தூர் மடம் சார்பில் கோடைகால ஆன்மீக கலாச்சார பயிற்சி முகாம் நிறைவு விழா நடைபெற்றது. இவ்விழாவிற்கு சிறப்பு விருந்தினராக மைசூர் சுத்தூர் மடம் தலைவர் ஜகத்குரு ஸ்ரீ சிவராத்திரி தேசிகேந்திர மகா சுவாமிகள் கலந்து கொண்டு ஆன்மீக சொற்பொழிவு வழங்கினார். கர்நாடகா மாநில முன்னாள் காவல்துறை டிஐஜி சங்கர் பிகாரி சிறப்புரையாற்றி, கோடை கால ஆன்மீக தியானத்தில் பங்கேற்ற பக்தர்கள் அனைவருக்கும் நன்றி தெரிவித்தார். இம்முகாமில், கர்நாடக மாநிலத்தை சேர்ந்த 110 பக்தர்கள் பிரதிநிகளாக பங்கேற்றனர். முகாமில், பக்தி சொற்பொழிவுகள், பிரார்த்தனை, தியானம், யோகா, பாரம்பரிய விளையாட்டு, கலைநிகழ்ச்சிகள் நடைபெற்றன. இப்பயிற்சி முகாம் 6 நாட்கள் நடைபெற்றது. நாள் தோறும் கர்நாடகா பல்வேறு பகுதிகளில் இருந்து ஆன்மீக சிறப்பு பயிற்சி பெற்ற பேச்சாளர்கள் ஆன்மீக சொற்பொழிவை மக்களுக்கு வழங்கினர். முகாமில், ஜெஎஸ்எஸ் கல்லூரி முதன்மை அலுவலர் பசவன்னா, மோகன், பள்ளி பொறுப்பாளர் சிவக்குமார், கல்லூரி மற்றும் பள்ளி ஆசிரியர்கள், பணியாளர்கள் பலர் கலந்து கொண்டனர்.

The post ஜெஎஸ்எஸ் பள்ளியில் கோடை கால ஆன்மீக கலாச்சார பயிற்சி முகாம் appeared first on Dinakaran.

Tags : Spiritual Cultural Training Camp ,JSS School ,Ooty ,Spiritual ,Cultural Training ,Ooty Thitukal JSS School ,Mysore Suttoor ,Summer ,Dinakaran ,
× RELATED கோடை சீசனை முன்னிட்டு...