×

ஜப்பானில் அடுத்தடுத்து ஏற்பட்ட நிலநடுக்கம்: ரிக்டர் அளவுகோலில் 7.1ஆக பதிவு

டோக்கியோ: ஜப்பானில் தெற்கு தீவு பகுதியில் உள்ள கியூஷு பகுதியில் அடுத்தடுத்து இருமுறை சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. முதலில் 6.9 ரிக்டர் அளவிலும், பின்னர் 7.1 என்ற ரிக்டர் அளவிலும் அடுத்தடுத்து நிலநடுக்கம் ஏற்பட்டது. நிலநடுக்கத்தை தொடர்ந்து ஜப்பான் நாட்டில் சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

ஜப்பானில் ஏற்பட்ட இந்த வலுவான நிலநடுக்கம் கியூஷுவின் கிழக்கு மற்றும் தெற்கு கடற்கரை மற்றும் ஷிகோகுவின் தெற்கு கடற்கரைக்கு சுனாமி எச்சரிக்கையையும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.இன்று அங்குள்ள நேரப்படி மாலை 4 மணியளவில் நிலநடுக்கம் ஏற்பட்டது.

முதல் நிலநடுக்கம் மியாசாகி கடற்கரையிலிருந்து 20 மைல் தொலைவில் கியூஷுவில் ஏற்பட்டது என்று அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதையடுத்து ஒரு நிமிடத்திற்குள் 7.1 ரிக்டர் அளவில் வலுவான நிலநடுக்கம் ஏற்பட்டது.

அடுத்தடுத்து ஏற்பட்ட நிலநடுக்கங்களால் ஜப்பானில் உள்ள மக்கள் மிகவும் பீதியடைந்தனர். நிலநடுக்கத்தை தொடர்ந்து ஜப்பான் நாட்டில் சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதால் ஜப்பானிய மக்கள் மேலும் அச்சமடைந்துள்ளனர்.

The post ஜப்பானில் அடுத்தடுத்து ஏற்பட்ட நிலநடுக்கம்: ரிக்டர் அளவுகோலில் 7.1ஆக பதிவு appeared first on Dinakaran.

Tags : Successive ,in Japan ,Tokyo ,Kyushu ,southern island region of ,Japan ,Tsunami ,Dinakaran ,
× RELATED ஜப்பான் நாட்டை சேர்ந்தவரின் வினோத...